Header Ads

Recent

முக்கிய அறிவிப்பு தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்வுத்துறை வெளியீடு

முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: தேர்வுத்துறை 
வெளியீடு
          தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு 9 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மாணவர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேசமயம் பிளஸ் 2 வகுப்பிற்கு பொதுத்தேர்விற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக மே 3ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது.

         அதற்கேற்ப மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பள்ளிகள் மூலம் சேகரிக்கப்பட்டன. இவை தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் மாநில அளவில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

        இந்தப் பட்டியலை சரிபார்க்க அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மே மாதம் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.

       இதற்காக பதிவு செய்துள்ள மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியலை நாளை (மார்ச் 22) முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

      இதில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதில் பிழைகள் இருந்தால் உடனே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தேர்வுத்துறைக்கு திருத்தங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

No comments