Header Ads

Recent

இன்றைய சுருக்கமான செய்திகள் 2ம் தவணை ரூ.2ஆயிரம் விரைவில் வழங்க படும் முதலமைச்சர்

இன்றைய சுருக்கமான செய்திகள் ;

2ம் தவணை ரூ.2ஆயிரம் விரைவில் வழங்க படும்  :முதலமைச்சர்


முதலமைச்சராக பதவி ஏற்கும் முன்னரே கொரோனா தடுப்பு ஆலோசனைகளை துவக்கினேன்

ரெம்டெசிவிர் தேவை அதிகரித்த போது தமிழகத்தின் பல இடங்களில் விற்பனைக்கு ஏற்பாடு செய்தோம்

சுமார் 1200 செவிலியர்களை பணி நியமனம் செய்து உத்தரவிட்டேன்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களுக்கு தனி கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்

முதலமைச்சராக பதவி ஏற்ற நாளிலேயே கொரோனா தடுப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினேன்

தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது

14 மாவட்டங்களில் 22 அமைச்சர்கள் கொரோனா தடுப்பு பணியில் செயல்பட்டு வருகின்றனர்

கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ரூ.30ஆயிரம் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கும் கொரோனா பணிகளுக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளுக்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது

கொரோனா மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது

திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது

கூட்டத்தை கட்டுப்படுத்த ரெம்டெசிவிர் மருந்து மருத்துவமனைகளுக்கு நேராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது

கொரோனா தடுப்பு ஆலோசனைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி குழுவுடன் நாளை ஆலோசனை

ஊரடங்கை நீட்டிப்பது, விதிகளை தளர்த்துவது, அதிகப்படுத்துவது குறித்து நாளை ஆலோசனை நடைபெறும்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 34ஆயிரம் என்கிற அளவில் உள்ளது

குறைந்த மக்கள் தொகை கொண்ட அண்டை மாநிலங்களில் 50ஆயிரத்தை தினசரி கொரோனா பாதிப்பு நெருங்குகிறது

தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்ற 14 நாட்களில் புதிதாக 16 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன

தமிழகத்தில் ஒரு நாளைக்கு 1.70 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது

ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியை விட கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தால் தான் மகிழ்ச்சி அடைவோம்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று என்னிடம் பலரும் கூறுகின்றனர்

கலைஞர் பிறந்த நாளுக்கு முன்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மேலும் தலா ரூ.2ஆயிரம் வழங்க நடவடிக்கை

ஜுன் 3 - கலைஞர் பிறந்த நாளுக்கு முன்பாக கொரோனா நிவாரணத்தின் 2ம் தவணை ரூ.2ஆயிரம் வழங்க நடவடிக்கை

கொரோனா தடுப்பூசி போதுமான அளவிற்கு விநியோகம் இல்லாத நிலை உள்ளது

தமிழகத்தில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது

கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது

பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து தொடர்புடைய துறையுடன் ஆலோசித்து முடிவு

ஆசிரியர்களுக்கான ஊதியம் பாதியாக குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் வதந்தி

கொரோனா காரணமாக டெல்லி சென்று பிரதமரை சந்திக்க முடியாத நிலை உள்ளது

நிலைமை சரியான பிறகு டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்துவேன்

சென்னையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மற்ற நகரங்களிலும் பின்பற்ற மோடி அறிவுறுத்தினார்

No comments