Header Ads

Recent

TNPSC - தேர்வு தள்ளிவைப்பு

TNPSC - தேர்வு தள்ளிவைப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2-ம் மற்றும் 3-ம் நிலைமொழித்தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் நவம்பர் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, மதுரை, நாகர்கோவில் ஆகிய 7 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிக கனமழை மற்றும் வானிலை சிவப்பு எச்சரிக்கை காரணமாக, தேர்வர்களின் நலனைக் கருத்தில்கொண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை (4 நாட்கள்) நடைபெறவிருந்த மொழித்தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகின்றன. இந்த நாட்களில் நடைபெறவிருந்த நேர்காணல் தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

No comments