Header Ads

Recent

TNPSC - குரூப் 1 தேர்வுக்கு இன்று நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்

TNPSC - குரூப் 1 தேர்வுக்கு இன்று நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பதவிகளுக்கு இன்று நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் உயர் பதவி தேர்வான குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி வெளியிட்டது.

இதில் துணை கலெக்டர் 18 இடம், துணை காவல் கண்காணிப்பாளர்(டிஎஸ்பி)-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 பதவிகள் இதில் அடங்கும். அறிவிப்பு வெளியானது முதல் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்து வந்தனர். இதுவரை சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். அதாவது இன்று நள்ளிரவு 11.59 மணி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தலில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விரிவான நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி எடுத்துள்ளது. அதே நேரத்தில் இணைய வழி விண்ணப்பங்களை வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தம் செய்ய வாய்ப்பை டிஎன்பிஎஸ்சி அளித்துள்ளது. தொடர்ந்து குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக குரூப் 1 முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் முதன்மை தேர்வு நடைபெறும் தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments